ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்சுக்கு அதிமுக அவைத்தலைவர் படிவம் விநியோகம்

ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம்.ஓபிஎஸ்சுக்கு அதிமுக அவைத்தலைவர் படிவம் வினியோகம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான படிவத்தை ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிவைத்தார்.

ஓ.பன்னீர் செல்வத்தை உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரைத் தேர்வு செய்யும்மாறு உச்சநீதிமன்றம் அதிமுகவுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 7-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்குள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் பெற்றுவிட அதிமுக வியூகம் வகுத்து வருகின்றது.

இந்நிலையில் அதிமுகவின் வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் வெளியிட்டுள்ளார். இந்த ஒப்புதல் படிவமானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பிறமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் படிவத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டரி பப்ளிக் முன்பு தங்கள் விருப்பத்தை பதிவு செய்து கையெழுத்து இட்டு அனுப்ப வேண்டும்.

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், இந்தப் படிவத்தை ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இன்று அனுப்பிவைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்குள் படிவத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 7-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதிமுக நாளையே இதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறவேண்டிய சூழலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in