`யாராலும் அமிழ்த்திட முடியாத பந்து அதிமுக'- சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

`யாராலும் அமிழ்த்திட முடியாத பந்து அதிமுக'- சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவைப் பொறுத்தவரை யாராலும் அமிழ்த்திட முடியாத ஒரு பந்து என்றும் தண்ணீரில் பந்தை அமிழ்த்த முடியுமா, மேலேதான் வரும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது உறவினர்களை அசிங்கப்படுத்த வேண்டும், கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதிமுகவைப் பொறுத்தவரை யாராலும் அமிழ்த்திட முடியாத ஒரு பந்து என்று கூறிய ஜெயக்குமார், தண்ணீரில் பந்தை அமிழ்த்த முடியுமா, மேலேதான் வரும் என்றும் எத்தனை அடக்குமுறை வந்தாலும், ஜனநாயக அமைப்பான நீதிமன்றம் இருக்கிறது என்றார்.

ஒரு ரவுடியை பிடித்துக் கொடுத்ததற்காக என் மீது 25 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்றும் இப்படிப்பட்ட ஒரு கொடுங்கோன்மையான ஒரு அரசு தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது என்றும் அதிமுக கட்சி முன்னோடிகள் மீது வழக்கு தொடுத்து அழித்துவிடலாம் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டால், அது பூனை பகல் கனவு கண்டதுபோல் ஆகும் என்றும் கூறினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்கள் பக்கம் வழங்க இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், வருமான வரித் துறையாக இருந்தாலும் சரி, லஞ்ச ஒழிப்புத் துறையாக இருந்தாலும் சரி நீதிமன்றம் என ஒன்று உள்ளது என்றும் நீதிமன்றத்தில் அதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in