திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: அதிமுக திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: அதிமுக திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திமுகவிற்கு எதிராக நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஒத்திவைத்துள்ளார்.

திமுக அரசிற்கு எதிராக மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை வேறு தேதிக்கு ஒத்திவைப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.9) பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது உருவாகி இருக்கும் 'மாண்டஸ்' புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாகக் கரையைக் கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய  மாவட்டங்களில் நாளை பேரூராட்சி அளவில் அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் வரும் 16.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in