தொண்டர்களுக்கு ஒரு மாதம் தடை... ஈபிஎஸ்ஸிடம் கட்சி சாவி ஒப்படைப்பு: ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

தொண்டர்களுக்கு ஒரு மாதம் தடை... ஈபிஎஸ்ஸிடம் கட்சி சாவி ஒப்படைப்பு: ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

அதிமுக அலுவலகத்தை திறக்க அனுமதி வேண்டி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நுழைய முற்பட்டனர். அப்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் வண்ணம் தொண்டர்களை ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in