அதிமுக கலவர வழக்கு : சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர்!

அதிமுக கலவர வழக்கு : சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர்!

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருதரப்பினரும் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை களேபரங்களுக்கு மத்தியில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களோடு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அலுவலகத்திலிருந்த கோப்புகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரை விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி இருதரப்பினரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in