அழுத்தம் கொடுத்த பாஜக; புலிகேசிநகர் அதிமுக வேட்பாளர் வாபஸ்: கர்நாடகா தேர்தலில் இருந்து பின்வாங்கினார் ஈபிஎஸ்!

 எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமிஅழுத்தம் கொடுத்த பாஜக; புலிகேசிநகர் அதிமுக வேட்பாளர் வாபஸ்: கர்நாடகா தேர்தலில் இருந்து பின்வாங்கினார் ஈபிஎஸ்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக வேட்புமனுத் தாக்கல் செய்த அன்பரசன், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிக்கேசி நகர் தொகுதியில் அதிமுகச் சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என ஈபிஎஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் அதிமுக வேட்பாளர் அன்பரசன் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், `அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று கர்நாடக மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளர் தொலைப்பேசியில் அழைத்துப் புலிக்கேசிநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பரிசீலனைச் செய்து அதிமுக வேட்பாளர் அன்பரசன் மனுவைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டு, அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in