அடிக்கப் பாய்ந்த ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ; மல்லுக்கு நின்ற மனோஜ்பாண்டியன்: பேரவையிலும் எதிரொலித்த இரட்டைத்தலைமை விவகாரம்!

சபாநாயகருடன் அதிமுகவினர் வாக்குவாதம்..!
சபாநாயகருடன் அதிமுகவினர் வாக்குவாதம்..!அடிக்க பாய்ந்த ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ; மல்லுக்கு நின்ற மனோஜ்பாண்டியன்: பேரவையிலும் எதிரொலித்த இரட்டைத்தலைமை

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதா விவகாரத்தில் ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ஈடுபட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனாஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனோஜ்பாண்டியன்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனோஜ்பாண்டியன்வேட்டியை மடித்துக் கட்டி மல்லுக்கு நின்ற மனோஜ்பாண்டியன்; தடுத்த ஓபிஎஸ், பேரவையிலும் எதிரொலித்த இரட்டைத்தலைமை விவகாரம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்ட மசோதாவை தாக்கல் செய்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விசிக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினர். அப்போது அதிமுக சார்பில் பேசிய தளவாய் சுந்தரம், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாநில அரசுக்கு உரிமையுள்ளதென உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியது என்றும், சட்டத்தை இயற்றுவதும், அதை அமல்படுத்துவதும் சட்டமன்றம் தான் என்றும் கூறினார்.

சட்டம் இயற்ற உரிமை உள்ளதா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்த தளவாய் சுந்தரம், இந்தச் சட்டத்தை முழுமையாக அதிமுக ஆதரிக்கிறது என்றார். அவரை தொடர்ந்து பேசிய  ஓபிஎஸ், முதலமைச்சர் கொண்டு வந்த தடை சட்டத்தை விவாதம் இன்றி  ஒருமனதாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் விவாதம் நடைபெறுவதாகவும் அதிமுக சார்பாக சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

உடனே அதிமுக சார்பாக என பேசிய ஓபிஎஸ்ஸுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பினர். இதற்கு இடையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும் மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர். கோவிந்தசாமியை நோக்கி எஸ்.பி.வேலுமணி கையை நீட்டி அமைதி காக்கச் சொன்னார். சட்டப்பேரவையில் மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து கூச்சலிட்டு  வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவிற்குள் ஒற்றைத்தலைமை சர்ச்சைக்கு பின்பு எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பதாக ஈபிஎஸ் அறிவித்தார். இதற்கான கடிதமும் சபாநாயரிடம் காட்டப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்ஸுக்கு அருகே உள்ள ஓபிஎஸ் இருக்கை மாற்றம் செய்யப்படுமா என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பட்ட நிலையில் இந்த விவகாரம் பேசி முடிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நிலையில், இருக்கையும் மாற்றம்  செய்யவில்லை.  ஈபிஎஸ்- ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்த நிலையில் முதன் முறையாக இன்று நேரடியாக பேரவையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in