அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு: நாளை முதல் மனுத்தாக்கல்

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு: நாளை முதல் மனுத்தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கானத் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை (மார்ச் 18) முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம்.

மார்ச் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம். மார்ச் 26-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மார்ச் 27-ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு பெறலாம். விதிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in