
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது என நடிகை கஸ்தூரி காட்டமாக பேசியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கு நீரை தராமல் கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பிரபலங்களும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, கர்நாடகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுப்படி காவிரியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு முழு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு மட்டுமே 75% உரிமை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், காவிரி கர்நாடகாவின் தனி சொத்து என்று அம்மாநில அரசியல் கட்சியினர் நம்ப வைத்துள்ளதாக சாடியுள்ள அவர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு, தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம், உணவு பொருட்கள் ஆகியவற்றை அனுப்பக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!