
தவறான செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் தடை செய்யப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது சில பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், ஆர்என்ஐ அனுமதி இல்லாத பத்திரிகைகளைத் தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, " பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுச்சேரியில் தடை செய்யப்படும். அத்துடன் தவறான செய்தி வெளியிடும் பத்திரிகை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.