பால், நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு: ஆவின் நிறுவனம் அதிரடி!

பால், நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு: ஆவின் நிறுவனம் அதிரடி!

பால் மற்றும் நெய் ஆகிய பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து  தற்போது வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஆவின் பால் விலை  உயர்த்தப்பட்ட நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்தனர். அடுத்ததாக ஆவின் நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி புதிய விலைப் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஒரு லிட்டர் நெய் 580 ரூபாயாக இருந்த நிலையில் அது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.630 ஆக உயர்ந்துள்ளது.  500 மி.லி அளவு கொண்ட நெய் டப்பா விலை 290 ரூபாயிலிருந்து 315 ரூபாயாக வும், 100 மி.லி நெய் டப்பா விலை 70 லிருந்து 75 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெண்ணெய் விலையும் உயர்த்தியுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

500 கிராம் வெண்ணெய்(C -ரகம்) 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும், 100 கிராம் வெண்ணெய்(C -ரகம்) 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் வெண்ணெய்(T -ரகம்) 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவின் பாலைக் கொண்டு தயாரிக்கும் இனிப்பு வகைகளும் படிப்படியாக உயர்வைக் காணும் எனத் தெரிகிறது. ஆவில் விலை உயர்வு நடுத்தர குடும்பத்தினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in