பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பா?: அமைச்சர் உதயநிதி பதில்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பா?: அமைச்சர் உதயநிதி பதில்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தேர்வை நேற்று எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. மொழிப்பாடத் தேர்வை இவ்வளவு பேர் எழுதாதது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கல்வித்துறை அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in