மக்களவைத் தேர்தலில் கரூரில் மட்டும் இத்தனை பேர் போட்டியா?

மயிலாடுதுறையில் வேட்புமனு பரிசீலனை
மயிலாடுதுறையில் வேட்புமனு பரிசீலனை

மக்களவைத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,749 வேட்பு மனுக்களில்  664 மனுக்கள்  நிராகரிக்கப்பட்டு  1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல்  19-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கடந்த 27-ம்  தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் 664 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரின் வேட்பு மனுக்களும், தென் சென்னையில் 53 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. வட சென்னையில் 49 பேரின் மனுக்கள், நாமக்கல்லில் 48 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் பரிசீலனை
வேட்புமனுக்கள் பரிசீலனை

ஈரோட்டில் 47,  கோவையில் 41, திருச்சியில் 38, வேலூர், திருவண்ணாமலையில் தலா 37, கிருஷ்ணகிரியில் 34, தூத்துக்குடியில் 26, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி தொகுதிகளில் தலா 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் அரக்கோணம், தேனியில் தலா 29, சேலம், விருதுநகர், கன்னியாகுமரி ராமநாதபுரத்தில் தலா 27,  திருநெல்வேலி, தென்காசியில் தலா 26 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் 25, பெரம்பலூரில் 23, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரையில் தலா 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.  பொள்ளாச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூரில் 19, சிதம்பரத்தில் 18, மயிலாடுதுறையில் 17,திருப்பூர், நீலகிரியில் தலா 16, திருவள்ளூரில் 14,  காஞ்சிபுரம், தஞ்சாவூரில் தலா 13,  நாகப்பட்டினம் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள். வாபஸ் பெற்றவர்கள் போக மீதம் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அன்றைய தினம் மாலையில் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in