மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி: கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி: கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சேலம் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பாடியை சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14-ம் தேதி காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றார்கள் என்றும் அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா எந்த காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in