
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2023 ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 2,546 கோடி ரூபாய் கூடுதல் செலவினமாகும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்