4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசு வாங்கவில்லை: தமிழக அரசுக்குத் திரும்ப வந்த தொகை எவ்வளவு?

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசு வாங்கவில்லை - தமிழக அரசு தகவல்

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு 1000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை. அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேர்களும் பொங்கல் பரிசு வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒரு சிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர். சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

வடசென்னையில் ஆயிரத்து 35,723 குடும்ப அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர்களும் ரூபாய் வாங்கவில்லை. இதற்கு அடுத்தப்படியாக கோயம்பத்தூரில் 32,326 குடும்ப அட்டைத்தாரர்கள் பொங்கல் பரிசு வாங்கவில்லை.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8026 கார்டுதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டுதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டுதாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in