இந்தியாவில் 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில், " கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில், 2017-ம் ஆண்டில் 5,955 விவசாயிகளும், 2018-ம் ஆண்டில் 5,763 விவசாயிகளும், 2019-ம் ஆண்டில் 5,957 விவசாயிகளும், 2020-ம் ஆண்டில் 5,579 விவசாயிகளும், 2021-ம் ஆண்டில் 5,318 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த பட்டியலில் முதல் மற்றும் 2-வது இடங்களை அந்த மாநிலங்கள் பெற்றுள்ளன. நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள், பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in