
தமிழ்நாட்டின் நம்பர் 1 திருடன் இந்துசமய அறநிலையத்துறைதான். கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. கோவிலுக்கும், இந்துக்களுக்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
3ம் கட்ட பாத யாத்திரையை அவிநாசியில் துவங்கிய பின்னர் பேசிய அண்ணாமலை, “அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சமீபத்தில் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்துகளுக்கு பாதுகாப்பில்லாத மற்றும் சிலை திருட்டை வேடிக்கை பார்க்கும் அரசாக திமுக உள்ளது. அரசின் அறிக்கையின் படி 1992-2017 வரை காணாமல் போன சிலைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல். மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து அங்கம் வகித்த திமுக எத்தனை சிலைகளை மீட்டு வந்துள்ளது? மோடி பதவியேற்ற பின் 361 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டுடனும் போராடி பிரதமர் மோடி சிலையை மீட்டு வருகிறார்.
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. அறநிலையத்துறைதான் தமிழகத்தின் நம்பர் 1 திருடன். அதைத்தான் தெலுங்கானாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறினார். பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார்” என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!