அசம்பாவிதங்களைத் தடுக்க 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு... சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு அக்டோபர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள்

மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் மணிமண்டபம் மற்றும் திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள நினைவு தூண் உள்ளிட்ட பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழா நிகழ்ச்சிகள் குறித்து மருது பாண்டியர் வாரிசுதாரர் குழு தலைவர் ராமசாமியிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்தும், வாகனம் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மருது பாண்டியர்கள் நினைவாக காளையார் கோவிலில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

ஆண்டுதோறும் அக்டோபர் 27--ம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மணி மண்டபத்திற்கு வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலை
மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலை

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in