
“ஒற்றைச் செங்கல் வைத்து மதுரை எய்ம்ஸ் என்று ஏமாற்றியதைப் போல, எந்த ஒரு கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரே ஒரு பலகையை மட்டும் வைத்து ‘திண்டுக்கல் மாநகராட்சி’ என்று ஏமாற்றிவிட்டது அதிமுக” என்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் பேசிச் சென்றது திண்டுக்கல் மக்களை "அட.." போட வைத்திருக்கிறது.
உண்மைதான். 2014-ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது அதிமுக கையில்தான் இருந்தது திண்டுக்கல் நகராட்சி. தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையையே கண்டுகொள்ளாதவர்கள், திண்டுக்கல்லை கண்டுகொள்வார்களா? விளைவு, நிர்வாகச் சீர்கேட்டின் மொத்த உருவமாகிப் போனது திண்டுக்கல் மாநகராட்சி. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தள்ளாடுகிறது திண்டுக்கல் மாநகராட்சி.
திமுகவும் மாவட்டத்தின் முக்கிய நகரமான திண்டுக்கல்லை விட்டுவிட்டு பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஏரியாவிலேயே அரசியல் செய்ததால் இயல்பாகவே திண்டுக்கல் நகர் அதிமுக கோட்டையானது. இதை உணர்ந்துதானோ என்னவோ, இம்முறை திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியை மார்க்சிஸ்ட்களுக்கு தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது திமுக. அதனால் திண்டுக்கல்லை அதிமுக மிக எளிதாக வென்றது. திண்டுக்கல் மாநகராட்சியையும் அதிமுகவே கைப்பற்றிவிடும் என்பதுதான் தொடக்கம் முதலே பேச்சாக இருந்தது.
இம்முறை திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால், அதிமுக முன்னாள் மேயர் மருதராஜ் தன் மகள் பொன்முத்தையும் மகன் பிரேம் என்ற வீரமார்பனையும் தலா ஒரு வார்டில் இறக்கினார். அதெப்படி மாவட்டச் செயலாளரைக்கூட கேட்காமல், தனது மகளை மருதராஜ் மேயர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பஞ்சாயத்துக் கூட்டிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன்பங்குக்கு தனது மகன் ராஜமோகனை நிறுத்தினார்.
எடப்பாடியிடம் பஞ்சாயத்துப் போனது. “அதிமுக வேட்பாளர்களின் செலவுகளை நான்தான் கவனிக்கிறேன். அதற்கெல்லாம் போட்டிக்கு வராத சீனிவாசன் இப்போது ஏன் வீம்பு செய்கிறார்?” என்று மருதராஜ் எகிற, கடைசியில் மேயர் வேட்பாளராக பொன்முத்தையும் துணை மேயர் வேட்பாளராக ராஜமோகனையும் அங்கீகரித்து பஞ்சாயத்து கலைக்கப்பட்டது. இருந்தாலும்கூட, “துணை மேயர் யார் என்பதையும் நான்தான் முடிவெடுப்பேன்” என்று மருதராஜ் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.