காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்களா? - அகிலேஷ் யாதவ் அதிரடி பதில்

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்களா? - அகிலேஷ் யாதவ் அதிரடி பதில்

சமீபத்தில் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து, காங்கிரஸ் இல்லாத புதிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொண்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸுக்கு ஒரு முக்கிய குறிப்பை சொல்லியுள்ளார்.

காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், "எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தனது பங்கை தானே தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி, நாங்கள் பிராந்திய கட்சிகள்" என்று கூறினார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சி முன்னணியின் சூத்திரம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "எதிர்க்கட்சி முன்னணியின் பார்முலாவை நாங்கள் வெளியிட மாட்டோம்; பாஜகவை தோற்கடிப்பதே குறிக்கோள்" என்று அவர் கூறினார்.

1996 ம் ஆண்டு முதல் தங்கள் கட்சி போட்டியிடாத காந்தி குடும்பத்தின் கோட்டையான அமேதி, ரேபரேலி தொகுதிகளில், தனது கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அகிலேஷ் யாதவ் சுட்டிக்காட்டினார். "அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற எங்கள் கட்சி உதவுகிறது, ஆனால் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களுக்கு எதிராக அநீதி நடந்தால், காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இந்தத் தொகுதிகளில் நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எங்கள் தலைவர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்போது முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது, நாங்கள் எங்கள் கட்சியினருடன் பேசி முடிவெடுப்போம்," என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அவர், "எந்தக் கட்சி தங்களுக்கு எதிராக நின்றாலும், பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறையை அனுப்புகிறார்கள். பாஜகவிடம் தடுப்பூசி மற்றும் சலவை இயந்திரம் உள்ளது. அவர்களுடன் யார் இணைந்தாலும் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இதைத்தான் காங்கிரஸ் முன்பு செய்தது, இப்போது பாஜகவும் அதையே செய்கிறது. எனவே காங்கிரஸைப் போலவே பாஜகவும் வரும் நாட்களில் அரசியல் ரீதியாக முடிவுக்கு வரும்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in