தனி மனித உரிமைகளின் சாம்பியன்

தனி மனித உரிமைகளின் சாம்பியன்

ஈரானில் ஜூலை 26-ல் தொடங்கும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் விலகியிருக்கிறார். ஈரானில் பொது இடங்களில் பெண்கள் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி சவுமியாவும் முக்காடு அணிந்துகொண்டுதான் விளையாட வேண்டும் என்று கூறப்பட்டது. இது தனது அடிப்படை மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் சவுமியா. முன்னாள் உலக ஜூனியர் செஸ் சாம்பியனான சவுமியா, இதன் மூலம் தனி மனித உரிமைகளின் சாம்பியனாகவும் ஆகியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in