எதையும் தாண்டி புனிதமானது... மணவாழ்வில் இணைந்த காதல் மனங்கள்!

எதையும் தாண்டி புனிதமானது... மணவாழ்வில் இணைந்த காதல் மனங்கள்!

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மனிதத்தைவிடவும் மதமே பிரதானம் எனும் நச்சு விதை நம்மிடையே தூவப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலில், காதல் மூலம் மத எல்லைகளைக் கடந்து மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அன்பின் ஆழத்தைத் தாண்டி வேறு எந்த விஷயமும் பெரிதில்லை எனும் பாடத்தை இவர்கள் உணர்த்துகிறார்கள். அப்படியான உன்னத வாழ்வில் இணைந்த இரண்டு இளம் ஜோடிகளைச் சந்தித்தேன்.

பள்ளிப்பிராயத்து நட்பு

குளச்சலைச் சேர்ந்த முகமது அன்சார் அலியும், ப்ரீத்தா மோளும் பள்ளிக்காலம் தொட்டே ஒன்றாகப் படித்தவர்கள். ‘பாண்டவர் பூமி’ படத்தில் வரும், ‘தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்’ பாடல் வரிகள் இவர்களுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும். தோழமை உறவில் இருந்த இருவரும் காதலில் விழுந்த தருணம் பற்றி பேசத் தொடங்கினார் அன்சார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in