முடிஞ்ச அளவு உழைப்போம்… அப்புறம் ஆண்டவன் இருக்கான்!- மனம் தளராத மகாலட்சுமியின் கதை

முடிஞ்ச அளவு உழைப்போம்… அப்புறம் ஆண்டவன் இருக்கான்!- மனம் தளராத மகாலட்சுமியின் கதை

கரு.முத்து
muthu.k@kamadenu.in

அந்த டிவிஎஸ் எக்ஸ்.எல் மொபெட்டும், மகாலட்சுமியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு உழைக்கிறார்கள். அதிகாலையில் ஆரம்பித்து இரவு 10 மணி வரை ஏதேனும் வேலை இருந்துகொண்டே இருக்கிறது இருவருக்கும். மகாலட்சுமியின் சிரமத்தை உணர்ந்தோ என்னவோ, தன் ஆயுட் காலத்தையும் கடந்து ‘மக்கர்’ பண்ணாமல் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த மொபெட்.

ஆனால், 40 வயதுக்குள் நான்கு யுகத்துக்கான கஷ்டங்களை அனுபவித்திருக்கும் மகாலட்சுமி, உழைப்பில் அந்த மொபெட்டையும் ஒருபடி முந்தியவர். ஆம், குடும்ப பாரத்தைச் சுமந்தபடி சளைக்காமல் உழைக்கும் மகாலட்சுமியின் கதை அந்த அளவுக்கு அழுத்தமானது!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலிருந்து லகூன் தீவுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது ஜாம்புவானோடை. சற்றே பெரிய இந்தக் கிராமத்திலும், அருகில் உள்ள அம்பட்டன் கொள்ளை, இரண்டாம் கொள்ளை, மேலக்காடு உள்ளிட்ட கிராமங்களிலும் மகாலட்சுமியை உங்களில் யாரேனும் பார்த்திருக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in