என்னளவுல நான் வசதியாத்தான் இருக்கேன்!- ஸ்டேஷனரி கடைக்குள் ஓர் சமூக சிந்தனையாளர்

என்னளவுல நான் வசதியாத்தான் இருக்கேன்!- ஸ்டேஷனரி கடைக்குள் ஓர் சமூக சிந்தனையாளர்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

எழுத்துலகைப் பொறுத்தவரை சாமானியப் பிரஜை முதல் சக்கரவர்த்திகள் வரை யாராக இருந்தாலும், அடுத்தவர்களைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல உடனே முன்வர மாட்டார்கள். ஆனால், யூ.பைஸ் அகமத் வித்தியாசமானவர். எப்போதும் சக எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியே அதிகம் பேசுவார்.

எழுத்தை நேசிக்கும் சாமானியர்கள் குறித்து, ‘இந்து தமிழ் திசை’யிலும், ‘காமதேனு’விலும் வெளிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்துவரும் வாசகராகவே அறிமுகமான பைஸ் அகமத். 

“சிறப்பான எழுத்தாளரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. இதே மாதிரி, இன்னொரு எழுத்தாளரும் இருக்கார். அவரைப் பற்றியும் எழுதுங்களேன்” என்று போனில் அவ்வப்போது பரிந்துரைப்பார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in