அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்- தன்னம்பிக்கை தளிர் கண்மணி

அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்- தன்னம்பிக்கை தளிர் கண்மணி

என்.சுவாமிநாதன்

கண்மணியைப் பார்த்தாலே தன்னம்பிக்கை தானாய் பூக்கிறது நமக்குள். பிறவியிலேயே இரு கைகளும் இல்லை. கால்களும் போதிய வளர்ச்சி இல்லை. ஆனாலும் தனது அபாரத் திறமையால் உச்சம் தொடுகிறார் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கும் கண்மணி!

கேரள தொலைக்காட்சிகளின் தன்னம்பிக்கை ரியாலிட்டி ஷோக்கள் தொடங்கி, பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினர் இப்போது கண்மணிதான்! பேச்சு, ஓவியம், எழுத்து, இசை என சகலத்திலும் கோலோச்சும் கண்மணி,  சமீபத்தில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் பாராட்டுப் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

கேரளத்தின் மாவேலிக்கரையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அறுநூற்றிமங்கலத்தில் இருக்கிறது கண்மணியின் வீடு. அப்பா சசிகுமார் சவுதி அரேபியாவில் கார் டிரைவர். அம்மா ரேகா, தம்பி மணிகண்டன் என அழகான அளவான குடும்பம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in