சொன்னார்; செய்தாரா பொன்னார்?- கைவிட்டுப் போகிறதா கன்னியாகுமரி தொகுதி?

சொன்னார்; செய்தாரா பொன்னார்?- கைவிட்டுப் போகிறதா கன்னியாகுமரி தொகுதி?

என்.சுவாமிநாதன்

கடந்த நாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வென்ற ஒரே தொகுதி கன்னியாகுமரி. இங்கு வெற்றிபெற்று, மத்திய இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றி வெறுமனே கடந்துவிடக்கூடியது அல்ல. தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளை வாரிச் சுருட்டிய அதிமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, திமுகவை டெபாசிட் இழக்கவைத்து சூடிக்கொண்ட வெற்றி அது. இந்தத் தொகுதி வரும் தேர்தலிலும் பாஜகவுக்குக் கை கொடுக்குமா?

கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் தான் பாஜக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்ட விஷயம். கட்சியினரால் ‘பொன்னார்’ என்று அழைக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணனை மீறி சீட் கேட்க கட்சிக்குள் சமபலம் மிக்க ஆட்கள் இல்லை. பாஜக மாநிலத்தலைவர் தமிழிசைக்கும் இது சொந்த மண் என்றாலும், பொன்னார் கோலோச்சுவதால் அவர் இந்தப் பக்கம் அவ்வளவாய் எட்டிப்பார்ப்பதில்லை. எனவே, தங்களுக்கான ரூட் க்ளியராக இருப்பதால் தேர்தல் பணிகளைத் துவங்கிவிட்டது பொன்னார் படை!

வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in