மணிக்கு 200 ரூபாய்.. அசத்தும் ஆட்டோ சிவதாணு!
ஆட்டோக்காரர்கள் பல ரகம். கேரளத்தில் இருபது ரூபாயை வைத்துக்கொண்டு நம்பி ஆட்டோவில் ஏறலாம். கர்நாடகம், ஆந்திரத்திலும் அப்படியே. முப்பது நாற்பது ரூபாய்க்கு வருவார்கள். வடக்கிலும் மோசமில்லை, லக்னோ, அலகாபாத், உத்தராகண்ட், குஜராத், டெல்லி இங்கெல்லாம் பெரும்பாலும் மீட்டர் கட்டணங்கள்தான். அநேகமாக நாட்டிலேயே அதிகக் கட்டணம் வாங்குபவர்கள் சென்னை ஆட்டோக்காரர்களாகத்தான் இருப்பார்கள். சென்னையைப் பார்த்து தமிழகத்தின் இதர ஊர்களிலும் ஆட்டோக் கட்டணங்கள் எகிறிவிட்டன. இவர்களுக்கு மத்தியில், ‘ஆட்டோவில் ஒரு மணி நேரம் பயணிக்க ரூ.200 மட்டுமே’ என்ற புதிய் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவதாணு!
நாகர்கோவில், நாகராஜாகோயில் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ நிறுத்தும் சிவதாணு சமூகசேவகரும்கூட. கையைக் காலை இடிக்காமல் நல்ல அகலமான இருக்கைகளுடன் ஜம்மென்று இருந்த அவரது ஆட்டோவில் ஏறி அமர்ந்தபடியே சிவதாணுவிடம் பேச்சுக் கொடுத்தோம். “மீட்டர் கட்டணத்தை கவருமென்டு அறிவிச்சப்பவே நம்ம ஆட்டோவுல மீட்டர் இருந்துச்சு. சக ஆட்டோக்காரங்க திட்டுவாங்க. காதுல வாங்காமத்தான் இருந்தேன். அதேசமயம் மத்தவங்க பொழப்புக்கு ஏன் பொல்லாப்புன்னு நினைச்சேன். மீட்டர் கட்டணத்தையும் தாண்டக் கூடாது; கைப்பிடித்தமும் வரக் கூடாதுனு சிந்திச்சதுதான் ஒரு மணி நேரத்துக்கு 200 ரூபாய் திட்டம். இதுல ஒரு மணிநேரம் தொடர்ச்சியா ஆட்டோவுல போனாலும் 200 ரூபாய்தான். நிறுத்தி நிறுத்திப் போனாலும் அதே காசுதான். காத்திருப்புக் கட்டணமெல்லாம் கிடையாது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.