அதிர்ச்சி… அந்தியூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை!

அதிர்ச்சி… அந்தியூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் அருகே அத்தாணி முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த ஜோதிமணி (31) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். ஜோதிமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதிமணி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதிமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த பெண் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in