இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இரண்டு பேர் கைது!

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இரண்டு பேர் கைது!

சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமணத்திற்காக, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் குடும்பத்துடன் தங்கிருந்தார்.

இந்நிலையில் அவர் திருமண மண்டபத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக, இருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இளம்பெண் கூட்டலிட்டதை அடுத்து, மண்டபத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்த இரண்டு பேரையும் பிடித்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களை இருவரையும் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்களில் ஒரு இளைஞர் ராணிப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (20) என்பதும், மற்றொரு நபர் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

இருவரும் மண்டபத்தில் சமையல் வேலைக்கு உதவியாளராக இருந்து வந்ததுள்ளனர். அவர்கள் செல்போனைப் பார்த்த போது, இருவரும் இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீஸார், பச்சையப்பனை சிறையில் அடைத்துவிட்டு, சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in