தியாகி அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் கட்சியினர் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவிக்கும் தவெகவினர்
சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவிக்கும் தவெகவினர்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் கட்சியின் தலைவர் தான் எடுப்பார் என கடலூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி அஞ்சலை அம்மாளின் சிலைக்கு மாலை அணிவித்த பின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும் மகாத்மா காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சி ராணி என அழைக்கப்பட்ட கடலூரில் பிறந்த அஞ்சலை அம்மாளின் 134 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவிக்கும் தவெகவினர்
சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவிக்கும் தவெகவினர்

இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள்,பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோருடன் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் உத்தரவின்படி சிலைக்கு மாலை அணிவித்ததாக தெரிவித்தார்.

actor vijay
தவெக தலைவர் விஜய்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பார் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in