'சகுனி' பட வீடியோவை வெளியிட்டு அண்ணாமலையை பங்கம் செய்த திருச்சி சூர்யா!

அண்ணாமலை, திருச்சி சூர்யா
அண்ணாமலை, திருச்சி சூர்யா

அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் திருச்சி எஸ்.சூர்யா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என பாஜக தலைமை அண்மையில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அண்ணாமலையுடன் திருச்சி சூர்யா
அண்ணாமலையுடன் திருச்சி சூர்யா

இதனால் டென்ஷனான திருச்சி எஸ்.சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக முன்வைத்து வருகிறார். ஆனால், இதற்கு அண்ணாமலை எந்த பதிலும் தராமல் உள்ளார்.

இந்த நிலையில், திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை.

நீங்கள் என்ன? என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதி வீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை, பயமா அண்ணாமலை. அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்.

திருச்சி சூர்யா சிவா
திருச்சி சூர்யா சிவா

அதிகபட்சம் அமர் பிரசாத்தையும், கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல் துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்...” எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பதிவோடு நடிகர் சந்தானம் நடித்த சகுனி பட காமெடி காட்சியையும் பதிவிட்டுள்ளார். அதில்," முன்னாடியெல்லாம் ஜெயிலுக்குப் போகிறவன தான் தலைவன் என்பீர்கள். இப்போது ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறவனை தலைவன் என்கிறீர்கள்.

போங்கடா, நீங்களும் உங்க தலைவனும். உங்க கண்ணுக்கெல்லாம் காத்தாடி தான் தெரியும். ஏத்தி விட்ட இந்த நூல் தெரியாது. அவன் தலைவன் இல்லடா, போர்ஜரி, 420" என சந்தானம் பேசும் டயலாக் இடம் பெற்றுள்ளது. நடிகர் சந்தானம் மூலம் அண்ணாமலையை கிண்டல் செய்து திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in