சென்னை விமான நிலையத்திற்குள் கிடந்த மர்மப் பெட்டிகள்... பயணிகள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டிகள்
சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டிகள்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கொச்சின் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வருகை தந்தார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு புறப்பாடு நுழைவாயில் அருகே பயணிகளின் வசதிக்காக ஓய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு அட்டைப்பெட்டிகள் இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் காலிப்பெட்டிகள் என்பது தெரியவந்தது
வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் காலிப்பெட்டிகள் என்பது தெரியவந்தது

பின்னர் விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மோப்பநாய் மற்றும் பிரத்தியேக இயந்திரங்களைக் கொண்ட அந்த அட்டைப்பெட்டிகளை சோதனை செய்தனர். அப்போது அது காலி அட்டைப்பெட்டிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டியில் வீசினர். இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in