அதிர்ச்சி.... 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தீப்திகா
தீப்திகா
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டையில் 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகள் தீப்திகா (11). இவர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தீப்திகா அருகில் உள்ள தோழி வீட்டுக்கு படிக்க சென்றுவிட்டார்.

பிறகு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பி அவர் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். இந்நிலையில், அவர் திடீரென அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

விளையாடச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் அண்ணன் ரித்தீஸ் (14) தங்கையைத் தேடினார். அப்போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அறை கதவை அக்கம் பக்கத்தினர் உடைத்தனர். அப்போது அறையில் தங்கை தூக்கில் தொங்குவதை பார்த்து ரீத்தீஸ் அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார், மாணவி தீப்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in