கனவு மெய்ப்பட்டது: கோப்பையை வென்ற கையோடு ஓய்வை அறிவித்தனர் ரோகித் ஷர்மா, விராட் கோலி!

விராட் கோலி ரோகித் ஷர்மா
விராட் கோலி ரோகித் ஷர்மா
Updated on
2 min read

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள தருணத்தில் நட்சத்திர வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்திய ரசிகர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கும் இந்த நேரத்தில் இரண்டு அதிர்ச்சி தரும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அதாவது கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களில் டி20 போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்துள்ளனர்.

விராட் கோலி ரோகித் ஷர்மா
விராட் கோலி ரோகித் ஷர்மா

நேற்றைய போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்தார். அவர், “இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான்.

உலகக் கோப்பையை ஏந்த வேண்டுமென விரும்பினேன். இது ஓபன் சீக்ரெட். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது நீண்ட காத்திருப்பு. ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. ரோகித்துக்கு இது 9-வது டி20 உலகக் கோப்பை தொடர். எனக்கு 6-வது தொடர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் அற்புதமான நாள். ” என கோலி தெரிவித்தார்.

இந்திய அணி டி20 உலகக்கோப்பை
இந்திய அணி டி20 உலகக்கோப்பை

அதேபோல இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,"இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான் என்னுடைய இறுதிப் போட்டி. ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இல்லை. நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினோம். இதனை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுவே நான் விரும்பியது.

இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்" என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in