பரபரப்பு… திருச்சி அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

பரபரப்பு… திருச்சி அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே போலீஸார் ரவுடியை சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் சாம்சன் என்ற ரவுடி சாலப்பட்டி தலைமலை அடிவாரத்தில் துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ரவுடி அலெக்ஸை பிடிக்க தொட்டியம் காவல்நிலைய ஆய்வாளர் முத்தையன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது ரவுடி அலெக்ஸ் துப்பாக்கியை காட்டி காவல்துறையினரை மிரட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் முத்தையன், ரவுடி அலெக்ஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். கால் முட்டியில் குண்டு பாய்ந்த நிலையில், ரவுடி சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவுடி அலெக்ஸை, சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முன்னதாக போலீஸார் சுற்றி வளைத்த போது ரவுடி அலெக்ஸ், கற்களால் தாக்கியதில் காவலர் ராஜேஷ் காயமடைந்தார். எனவே, காயமடைந்த காவலர் ராஜேஸ் குமார் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் இருவரும மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in