விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக களமிறங்க வேண்டும்... ஓபிஎஸ் கோரிக்கை!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பதே முக்கியம் என்ற பெருந்தன்மையான முடிவை அனைவரும் ஒன்று கூடி எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை கொடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு என்ற பெயரில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 2வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இதே போல் அதிமுகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, அதிமுகவில் பிளவுபட்ட அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனிடையே முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறிய ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் அதிமுக ஒன்றிணைக்கும் குழு என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளனர். இந்நிலையில் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதில், “ஒன்றுபட்ட அதிமுக என்ற கம்பீர மிடுக்கோடு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா? கட்சியை கைப்பற்றிக் கொள்வதை விட கட்சியை காப்பாற்றுவதே முக்கியம். கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்ற பெருந்தன்மையான முடிவை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்.

அதிமுக ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகும் என்ற சுயநலத்தோடு சிந்திக்க கூடாது. பிளவு பட்டு கிடக்கும் நிலையில் இடைத்தேர்தலை எதிர்கொண்டு 11வது தொடர் தோல்வியை வரவு வைப்பதா?” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in