கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்... நெகிழ்ந்து போன இந்துக்கள்!

கோயிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்
கோயிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

கடலூர் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்து வாழ்த்திய சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கிள்ளை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி
கிள்ளை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை உடன் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு காளியம்மன் கோயில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சகாபாய் என்ற இஸ்லாமியர் தலைமையில் இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி காளியம்மனுக்கு சீர் வரிசைப் பொருட்களை எடுத்து வந்தனர்.

கோயிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்
கோயிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

பின்னர் கோயில் நிர்வாகிகளிடம் அந்த சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன் உட்பட 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in