பகீர்... தேநீர் போட்டுத் தராத மருமகளை கொலை செய்த மாமியார்!

தேநீர்
தேநீர்
Updated on
1 min read

தேநீர் தயாரித்து தராத மருமகளை கழுத்தை நெரித்து மாமியார் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள விகாரபாத் மாவட்டம் மோமின்பேட்டையைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு ஆறு வயது மகளும், எட்டு வயது மகனும் உள்ளனர். அஜ்மீரா குடும்பத்தினருடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம்(53) வசித்து வந்துள்ளார்.

தேநீர்
தேநீர்

கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் தேநீர் தயாரித்து தருமாறு ஃபர்சானா பேகம் நேற்று கேட்டுள்ளார்.

ஆனால், தேநீர் போட்டுத் தரமுடியாது என்று அஜ்மீரா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தேநீர் வேண்டும் என்று மாமியார் பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகிறது.

உங்கள் கட்டளையைச் செய்ய நான் வேலைக்காரி அல்ல என்று அஜ்மீரா கூறியுள்ளார். இதன்பின் அவர் சமையலறைக்குப் போய் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஃபர்சானா, அஜ்மீரா பேகத்தின் பின்னால் சென்று தாவணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மூச்சுத்திணறி அஜ்மீரா பேகம் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அத்தாப்பூர் காவல் நிலைய போலீஸார், விரைந்து வந்து அஜ்மீரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in