அடுத்த வாரத்தில் 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்காக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்த நவம்பர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்க போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இவ்வாண்டு நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழன் 1038வது சதய விழா
ராஜராஜசோழன் 1038வது சதய விழா

இதேபோல் மாமன்னன் ராஜராஜ சோழனின் 138 வது சதய விழாவை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருது சகோதரர்கள் நினைவு தினம்
மருது சகோதரர்கள் நினைவு தினம்

வருகிற அக்டோபர் 27ம் தேதி, சிவகங்கை மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள், மருது சகோதரர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் 7 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in