குட்நியூஸ்... இனி ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

குட்நியூஸ்... இனி ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஐஎம்பிஎஸ் மூலம்  நடத்தப்படும் பணப்பரிவர்த்தனைகளின் தினசரி வரம்பு  ஐந்து லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான பண பரிவர்த்தனை  பலமடங்கு அதிகரித்து விட்டது. சாதாரண மக்கள் வீட்டில் இருந்தபடியே Gpay, Phonepe, Paytm உள்ளிட்ட UPI செயலிகள் வாயிலாக நொடிப்பொழுதில் பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

அதே போல RTGS, NEFT, IMPS போன்ற முறைகள் வாயிலாக நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் IMPS வாயிலான பண பரிவர்த்தனையின் உச்சவரம்பு தற்போது மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முறையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இதுவரை இருந்து வந்தது. இந்த வரம்பை தற்போது ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது இனி நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களும் வணிகர்களும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMPS என்பது நிகழ்நேர கட்டணச் சேவையாகும், இது 24 மணி நேரமும் கிடைக்கும். இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் RBI அங்கீகரிக்கப்பட்ட ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வழங்குநர்கள் (PPI) மூலம் உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சேவையை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வழங்குகிறது.

மின்னணு பரிவர்த்தனைகள் நாட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அதனுடைய வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதால் இனிமேல் இன்னும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in