எச்சரிக்கை… மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

எச்சரிக்கை… மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

மேற்கண்ட இணையதளத்தில் அக்டோபர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது காவல்துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in