18 நாட்கள் நடைபெற்ற பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்க முடிவு

பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி

கடந்த 18 நாட்களாக நீடித்து வந்த சிறு பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டு, இன்று முதல் வழக்கம் போல பட்டாசு உற்பத்தியில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் (டாப்மா) அறிவித்துள்ளனர்.

சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் படி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் கடந்த மே 24-ம் தேதி முதல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாரத்தை இழந்து தவித்து வந்தனர்.

பட்டாசுகள்
பட்டாசுகள்

தொடர் வேலை இழப்பால் பட்டாசு தொழிலாளர்கள் அன்றாட குடும்பச் செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் சாத்தூர் எம்எல்ஏ-வான ரகுராம் ஆகியோரின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர் மற்றும் அவர்களது குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் ஜூன் 11-ம் தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பணியினைத் தொடங்க சங்க உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு

இதையடுத்து கடந்த 18 நாட்களாக நீடித்து வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டு, இன்று முதல் வழக்கம் போல பட்டாசு உற்பத்தியில் பட்டாசு ஆலைகள் ஈடுபட உள்ளன. வேலை வாய்ப்பிழந்த பட்டாசு தொழிலாளர்கள் மீண்டும் ஆலைகள் இயங்க உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in