மழை காரணமாக மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று விடுமுறை!

மழை காரணமாக மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று விடுமுறை!

கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வருகின்றனர்..

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகள் உட்பட விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதே போல் கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரவு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்தது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை  அளித்து வட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கும்  மற்றும் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இதனிடையே இன்றும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in