சாலையின் நடுவே சாவகாசமாக படுத்துறங்கிய போதை ஆசாமி - சேலம் அருகே போக்குவரத்து பாதிப்பு!

சாலையின் நடுவே படுத்துறங்கிய போதை வாலிபர்
சாலையின் நடுவே படுத்துறங்கிய போதை வாலிபர்
Updated on
1 min read

சேலம் அருகே மதுபோதையில் இருந்த நபர், சாலையின் நடுவே கோணிப்பையை விரித்து படுத்து உறங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில், ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனல் மின் நிலைய ஊழியர் சங்கர், மதுபோதையில் சாலையில் படுத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் அவர் தலை மீது ஏறி இறங்கியதால், அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த பதற வைக்கும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலையின் நடுவே படுத்துறங்கிய போதை வாலிபர்
சாலையின் நடுவே படுத்துறங்கிய போதை வாலிபர்

இந்நிலையில் நேற்று மாலை எடப்பாடி தாவாந்தெரு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி எடப்பாடி -பூலாம்பட்டி பிரதான சாலையில் நடந்து வந்தார். திடீரென அவர் பிரதான சாலையின் நடுவே கோணிப்பை விரிப்பு ஒன்றை விரித்து, அதில் சாலையின் குறுக்கே நீண்டு படுத்தார். "யாராவது தில் இருந்தா என் மீது வண்டியை விடுங்கடா பாப்போம்" என்று தொடர்ந்து கூறியபடி நீண்ட நேரமாக சாலையின் குறுக்கே படுத்திருந்தார்.

சாலையின் நடுவே படுத்துறங்கிய போதை வாலிபர்
சாலையின் நடுவே படுத்துறங்கிய போதை வாலிபர்

மதுபோதையில் இருந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் அங்கிருந்து எழுந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர் யாரையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாக பிரதான சாலையின் குறுக்கே படுத்து இருந்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் மதுபோதையில் சுற்றித் திரியும் நபர்கள் அடிக்கடி இது போன்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறையினர் இது போன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in