சிறுமியின் நுரையீரலில் சிக்கிய குண்டூசி
சிறுமியின் நுரையீரலில் சிக்கிய குண்டூசி

ஊசியை விழுங்கிய சிறுமி... நுரையீரலில் சிக்கியதை நீக்கி மருத்துவர்கள் அபாரம்!

Published on

தஞ்சையில் உடைமாற்றும் போது தவறுதலாக ஊசியை விழுங்கிய சிறுமியின் நுரையீரலில் இருந்து 4 சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய உடை ஒன்றை அணிய முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உடையில் இருந்த 4 சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி அவரது வாய் வழியாக உடலுக்குள் சென்றுள்ளது. அந்த ஊசி சிறுமியின் நுரையீரலில் சென்று சிக்கி உள்ளது. இதனால் அந்த சிறுமிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பிரான்காஸ்கோப்பி
பிரான்காஸ்கோப்பி

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவக் குழுவினர் நுரையீரலில் ஊசி சிக்கி இருப்பதை உறுதி செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்த ஊசியை அகற்ற முடியும் என்ற நிலை உருவானது. அப்போது பிராங்கோஸ்கோப்பி என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஊசியை கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் அகற்ற முடியும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிராங்கோஸ்கோப்பி சிகிச்சை முறை
பிராங்கோஸ்கோப்பி சிகிச்சை முறை

இதையடுத்து மூன்றரை நிமிடங்களில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படாமல், ஊசியை அகற்றி சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இது சாத்தியமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in