பொம்மன் - பெள்ளி தம்பதியரை சந்திக்க செல்கிறார் ‘தல’ தோனி!

பொம்மன் - பெள்ளி தம்பதி
பொம்மன் - பெள்ளி தம்பதி

"விரைவில் கிரிக்கெட் வீரர் தோனி எங்களை பார்க்க வருகிறார்" என்று பொம்மன் - பெள்ளி தம்பதி தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகளையும், அவற்றை பராமரித்து வந்த பாகன் தம்பதியர் இடையேயான பாச உறவை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட ஆவணப்படம் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்'. இதனை கார்த்திகி என்ற பெண் இயக்குநர் இயக்கியிருந்தார். பலராலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி சர்வதேச அளவில் புகழ் பெற்றனர். அதில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் என பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு, பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நேற்று நடந்த பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பொம்மன்-பெள்ளி தம்பதி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் பேசிய அவர்கள், "ஆஸ்கர் விருதுக்குப் பிறகு முக்கிய தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் எங்களை பாராட்டியது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் கிரிக்கெட் வீரர் தோனியும் எங்களை பார்க்க வருவதாக கூறியிருக்கிறார்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in