அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிக்கல்… விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்!

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிக்கல்… விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்!

டெல்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவர் சிறையில் உள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஏற்கனவே சிபிஐ சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்நது அவர் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அதே போல் இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் சிறையில் உள்ளனர். நேற்று மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க அறிவுறுத்தியது.

இந்நிலையில் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  நவம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in