திருச்சி : கல்லூரி மாணவி, தாயாருக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் சஸ்பெண்ட்!

திருச்சி : கல்லூரி மாணவி, தாயாருக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் சஸ்பெண்ட்!

கல்லூரி மாணவிக்கும், அவருடைய தாயாருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த திருச்சி கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக லியோ ஸ்டான்லி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் லியோ ஸ்டான்லி பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார். ஆனால் பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிக்கும், அவரது தாயாருக்கும், உதவி பேராசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லியை பணியிட நீக்கம் செய்து கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in