பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இந்த ரயில் நிலையங்களில் மின்சார ரயில் இன்று நிற்காது!

மின்சார ரயில்
மின்சார ரயில்
Updated on
1 min read

பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரை இணைக்கக் கூடிய போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாள் தோறும் வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

மின்சார ரயில்
மின்சார ரயில்

இந்த நிலையில் பரமாரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையிலான மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், " பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு, ஆவடி செல்லும் மின்சார ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்படும்.

மின்சார ரயில்
மின்சார ரயில்

மேலும் இந்த ரயில் இன்று முதல் வரும் 23-ம் தேதிவரை (17-ம் தேதி தவிர) கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர் ரயில் நிலையங்களில் நிற்காது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in